Saturday 18 February 2012

காவல் கோட்டம் குறித்த தோழர் மாதவராஜ்

காவல் கோட்டம் குறித்த தோழர் மாதவராஜ் எழுதியுள்ள
மிக முக்கிய பதிவின் சிறு பகுதி

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தூத்துக்குடியில் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். அன்று கவிதைகள் குறித்த அனுபவங்களை கவிஞர்.சு.வெங்கடேசன் பேசினார். நான் ஜெயகாந்தன் அருகில் உட்கார்ந்து எங்கள் இயக்கத்தின் கவிஞன் இவன் எனும் இறுமாப்பில் ரசித்துக்கொண்டு இருந்தேன். உணர்ச்சிகரமாக கவிதையின் வரிகளை விவரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் காதல் கவிதைகளுக்குள் நுழைந்தார். கூட்டம் முழுவதும் அவரது விவரிப்பில் தன்னை மறந்து கைதட்டி பாராட்டிக்கொண்டு இருந்தது. ஒரு தருணத்தில், ‘தாஜ்மஹால் பற்றி கவிதைகளை எழுதாத இந்தியக் கவிஞன் யார்?’ எனக் கடும் வேகத்தில் கேள்வியெழுப்பி, தாஜ்மஹால் கவிதைகள் ஒவ்வொன்றாக சு.வெங்கடேசன் சொல்லச் சொல்ல எங்கும் ஆரவாரம் எழுந்தபடி இருந்தது. நானும் கைதட்டிக்கொண்டு இருந்தேன். ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். கொட்டித் தீர்த்து பெருமிதமாக இறங்கியவரை, “வெங்கடேசன்!” என ஜெயகாந்தன் அழைத்தார். இயக்கத் தோழர்களின் பாராட்டுக்களிலும், கைகுலுக்கல்களிலும் பூரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் மெத்தப் பணிவோடு ஜெயகாந்தனின் அருகில் வந்தார். “வெங்கடேசன்! தாஜ்மஹாலைப் பற்றி பாரதி எழுதவில்லைத் தெரியுமா?” என்றார் அவர். சட்டென்று வலியையும், குற்ற உணர்வையும் சுமந்த சு.வெங்கடேசனின் முகத்தைப் பார்த்தேன். அவரைவிட நான் சிறுத்துப் போனேன். கைதட்டி மகிழ்ந்த என்னையும் ஜெயகாந்தன் பார்த்திருப்பார். யாராயிருந்தாலும் உண்மைகளை முழுவதும் அறியாமல் பாராட்டுவது அல்லது ஆமோதிப்பது சரியல்ல என்பது எனக்கான பாடம். எல்லாம் தெரிந்த மாதிரி அளந்துவிடுவது சரியல்ல என்பது சு.வெங்கடேசனுக்கான பாடம். ஆனால் அவர் அதை கற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரது எழுத்துக்கள் சொல்கின்றன.



அனைவரும் முழு பதிவை  அவசியம் வாசிக்க...............

http://www.mathavaraj.com/2012/02/3.html

No comments: