Wednesday 22 February 2012

காவல் கோட்டம் விருதுக்கு தகுதியானதா??

இந்த வார குமுதத்தில் முழு பதிவும் உள்ளது



எழுத்தாளர் ஜெயமோகனுக்கும்
குமுதம் பத்திரிகைக்கும்…. மாதவராஜ்
எழுத்தாளர் ஜெயமோகன், “எழுத்தாளர்களுக்கென்று கம்யூனிஸ்ட் கட்சியில் 1770 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது இதுவரை காவல்கோட்டத்தைப் போல ஒரு உருப்படியான வேலையைச் செய்திருக்கிறர்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். சு.வெங்கடேசனையும், காவல்கோட்டத்தையும் முன்வைத்து ஒட்டுமொத்த எழுத்தாளர் சங்க அமைப்பையே ஜெயமோகன் கேலி செய்திருப்பதாகவும், இழிவுபடுத்தியிருப்பதாகவுமே உணர்கிறேன். எழுத்தாளர் கு.அழகிரிசாமி எங்கள் பிதாமகனாக இன்னும் தன் எழுத்துக்களில் வாழ்கிறார். தமிழ் இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கு ஒரு மகத்தான அத்தியாயம். மலரும் சருகும் எழுதிய எழுத்தாளர்.டி.செல்வராஜிலிருந்து, தாகம், சங்கம் போன்ற நாவல்களைப் படைத்த எழுத்தாளர் கு.சின்னப்பாரதியிலிருந்து அது ஆரம்பிக்கிறது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் வழியே பயணிக்கிறது. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, பவா.செல்லத்துரை, ஷாஜஹான் என , இன்னும் பல எழுத்தாளர்களாய் அது தன் எல்லைகளை அழகாக விரித்திருக்கிறது. இவர்களின் படைப்பு யாவும் உருப்படாதவை என ஒற்றை வார்த்தையில் நிராகரிக்கிறீர்கள். முற்போக்கு எழுத்தாளர்கள் குறித்த உங்கள் அபிப்பிராயம் இதுவே எனில், கோணலான உங்கள் இலக்கியப் பார்வையை சொல்லும் அளவுகோலும் அதுவேயாகட்டும். இப்பேர்ப்பட்ட நீங்கள் பாராட்டுவதாலும் நாங்கள் காவல்கோட்டத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.



சும்மா வசை, காழ்ப்புணர்ச்சி என்று பேசுவதை விட்டு எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வெங்கடேசன் உட்பட இன்னும் காவல் கோட்டம் நாவலைக் கொண்டாடும் யாரும், அதன் உருவம் மற்றும் உள்ளடக்கம் குறித்து விவாதிக்கத் தயார் என்றால் நானும் தயாராக இருக்கிறேன். தற்கால சமூகத்துக்கு ஏற்ற எந்த மீள்வாசிப்புமற்று ஒரு வரலாற்றைப் புனைவது பெரும் கேடு. அதைச் சொல்லியாக வேண்டும்.


http://www.mathavaraj.com/2012/02/blog-post_22.html

Saturday 18 February 2012

காவல் கோட்டம் குறித்த தோழர் மாதவராஜ்

காவல் கோட்டம் குறித்த தோழர் மாதவராஜ் எழுதியுள்ள
மிக முக்கிய பதிவின் சிறு பகுதி

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தூத்துக்குடியில் எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். அன்று கவிதைகள் குறித்த அனுபவங்களை கவிஞர்.சு.வெங்கடேசன் பேசினார். நான் ஜெயகாந்தன் அருகில் உட்கார்ந்து எங்கள் இயக்கத்தின் கவிஞன் இவன் எனும் இறுமாப்பில் ரசித்துக்கொண்டு இருந்தேன். உணர்ச்சிகரமாக கவிதையின் வரிகளை விவரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் காதல் கவிதைகளுக்குள் நுழைந்தார். கூட்டம் முழுவதும் அவரது விவரிப்பில் தன்னை மறந்து கைதட்டி பாராட்டிக்கொண்டு இருந்தது. ஒரு தருணத்தில், ‘தாஜ்மஹால் பற்றி கவிதைகளை எழுதாத இந்தியக் கவிஞன் யார்?’ எனக் கடும் வேகத்தில் கேள்வியெழுப்பி, தாஜ்மஹால் கவிதைகள் ஒவ்வொன்றாக சு.வெங்கடேசன் சொல்லச் சொல்ல எங்கும் ஆரவாரம் எழுந்தபடி இருந்தது. நானும் கைதட்டிக்கொண்டு இருந்தேன். ஜெயகாந்தன் எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தார். கொட்டித் தீர்த்து பெருமிதமாக இறங்கியவரை, “வெங்கடேசன்!” என ஜெயகாந்தன் அழைத்தார். இயக்கத் தோழர்களின் பாராட்டுக்களிலும், கைகுலுக்கல்களிலும் பூரித்துக்கொண்டு இருந்த சு.வெங்கடேசன் மெத்தப் பணிவோடு ஜெயகாந்தனின் அருகில் வந்தார். “வெங்கடேசன்! தாஜ்மஹாலைப் பற்றி பாரதி எழுதவில்லைத் தெரியுமா?” என்றார் அவர். சட்டென்று வலியையும், குற்ற உணர்வையும் சுமந்த சு.வெங்கடேசனின் முகத்தைப் பார்த்தேன். அவரைவிட நான் சிறுத்துப் போனேன். கைதட்டி மகிழ்ந்த என்னையும் ஜெயகாந்தன் பார்த்திருப்பார். யாராயிருந்தாலும் உண்மைகளை முழுவதும் அறியாமல் பாராட்டுவது அல்லது ஆமோதிப்பது சரியல்ல என்பது எனக்கான பாடம். எல்லாம் தெரிந்த மாதிரி அளந்துவிடுவது சரியல்ல என்பது சு.வெங்கடேசனுக்கான பாடம். ஆனால் அவர் அதை கற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரது எழுத்துக்கள் சொல்கின்றன.



அனைவரும் முழு பதிவை  அவசியம் வாசிக்க...............

http://www.mathavaraj.com/2012/02/3.html

வீரவாள் குறித்து ஞாநி

உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டுவிழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரும்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்ட்ப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.

முழு பதிவுக்கு  www.gnani.net

நன்றி - ஞாநி/கல்கி

Monday 13 February 2012

PLAGIARISM என்றால் என்ன?



 சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கப்பட்டு  (யாரால்??) அப்படியே முழுமையாக காவல் கோட்டம் நாவலில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.

Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.

History Of The Nayaks Of Madura- R Sathianathaier  -  Page 254

காவல் கோட்டம
நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்

மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)

(பக்கம் நம்பர் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளது)

வரலாற்று பாடப்புத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதைத் தவிர இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.

இப்படியான தகவல்கள் பக்கம் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன.
(நன்றி - எஸ்.ராமகிருஷ்ணன்)

இதனை எல்லாம் மிக விரிவாக ஒருவர் ஆதாரங்களுடன் சொல்லியும் ஏன் இலக்கியவாதிகள் விவாதிக்க மறுக்கிறார்கள்.





விருதுகள் சர்ச்சைகள்


காவல் கோட்டம் நாவலுக்கு வருது வாங்கப்பட்டதை தொடர்ந்து என் சினிமா நண்பர்கள் பலர் இது தொடர்பாக இன்னும் பல புதிய தகவல்களை தந்து என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். அதனை ஒரு விரிவான பதிவாக எழுதவுள்ளேன், இந்த நேரத்தில் இதனை வாசித்து ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இலக்க்கிய வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், நம் நோக்கம் ஒரு விவாதத்தை உருவாக்குவதே.

விவாதத்தை தொடர்ந்து கு.சின்னப்பாரதி அவர்கள் இந்த ஆண்டு விருதுக்கு தடை வாங்க நீதிமன்றத்துக்கு செல்ல ஆலோசித்ததாகவும் அதனை சிபிஎம் கட்சி மிக பலமாக தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவருகிறது.

இந்த காலச்சூழலில் எனக்கு சில சுட்டிகளை யாரோ அனுப்பிவைத்திருக்கிறார்கள், அது இன்னும் இந்த உரையாடலை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த சுட்டிகளை இங்கே தருகிறேன்

http://www.mathavaraj.com/2012/02/blog-post_11.html

http://www.mathavaraj.com/2012/02/2.html

இது தவிர ஞாநி இந்த வார கல்கியில் எழுதிய பதிவு அனைவரும் வாசிக்க வேண்டியதே, அவரது பத்தி இணையத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை, இருந்தால் இங்கு அதனை வாசகர்கள் அனுப்பிவைக்கவும்.

மாதவராஜ் மற்றும் ஞாநி அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மனசாட்சியின் குரலாக ஒலித்தமைக்கு கூடுதல் நன்றிகள்.